முன்னதாக, ஆளுநர்கள் நிலுவையில் வைத்திருக்கும் மசோதாக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி வழங்கிய தீர்ப்பை அடுத்து, குடியரசுத் தலைவர் சில கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள், "ஜனாதிபதி சில கேள்விகளுக்கு ஆலோசனை கேட்டிருக்கும்போது, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், "நாங்கள் ஜனாதிபதியின் கேள்விகளை மட்டுமே விசாரிக்கிறோம், ஏற்கனவே அளித்த தீர்ப்பை மாற்ற மாட்டோம், வெறும் ஆலோசனை மட்டுமே வழங்குவோம்" என்று தெளிவுபடுத்தினர்.