"சமஸ்கிருதத்திற்கு அரசு ஆதரவு கிடைக்குமென்றாலும், மக்களின் ஆதரவும் அவசியம். இது இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டுமென்றால், மக்கள் அதை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும்," என்று மோகன் பகவத் கூறினார்.
சமஸ்கிருதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய வேண்டும் என்றும், அன்றாட வாழ்வில் அதை ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"தற்சார்பு மற்றும் சுய பலம் அடைவதில் எல்லோருக்கும் ஒருமித்த கருத்து உள்ளது. இதற்கு நாம் நமது அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்," என்று பகவத் கூறினார்.
“இந்தியாவின் பலம் அதன் தற்சாற்புத் தன்மையில் உள்ளது. தற்சார்பு மூலமாக வரும் உரிமையுணர்வு என்பது தனித்துவமானது. அது மொழியின் மூலமாகவே வெளிப்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தை அறிவது என்பது இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கு சமம்” என்று அவர் குறிப்பிட்டார்.