கேரளாவுக்கு இடைவிடாது காக்கும் மத்திய அரசு! Wayanad Landslideல் மத்திய அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்!

First Published Aug 10, 2024, 11:43 AM IST

பேரிடர்களின் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வகையில், தேவையான உதவி நிதியை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் கேரளாவுக்கு மத்திய அரசு எப்போதும் உதவிக் கரம் நீட்டுகிறது.
 

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30தேதி இடைவிடாது பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேடுப்பட்டி, சூரல்மலை ஆகிய கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பேரிடரின் நிலைமைய அறிந்த பிரதமர் மோடி அரசு, நிலைமையை உடனடியாக ஆய்வு செய்து சம்பவ இடத்திலை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள NDRF, ராணுவம், விமானப்படை, கடற்படை, தீயணைப்பு சேவைகள் போன்றவற்றின் 1200க்கும் மேற்பட்ட மீட்பு படைக்குழுவினரை கேரளாவுக்கு அனுப்பியது.

மேலும், மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைக்காக 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் இன்னும் பிற மருத்துவ பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வயநாட்டில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடத்தில் இந்திய இராணுவம் 190 அடி பெய்லி பாலத்தை அமைத்தது. இது கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன. மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் இந்த பாலத்தின் கட்டுமானம் வெறும் 71 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. முன்பு பாலம் சேதமடைந்ததால் சிக்கித் தவித்த சுமார் 200 பேரை மீட்க கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை வேகமாக இயக்க இந்த பாலம் பேருதவியாக இருந்தது. மேலும், மீட்பு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த உதவியது.

வயநாட்டில், இதுவரையில் மொத்தம் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 520 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 112 சடலங்கள் NDRF மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளன.
 

Latest Videos


மத்திய குழு!

கேரளாவில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய மாநில அரசுகளுக்கிடையே மத்திய குழு (IMCT) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.

Wayanad : வயநாட்டில் இருந்து புறப்பட்ட ராணுவம்.! கேரள மக்களிடம் எங்கள் இதயங்களை விட்டு செல்வதாக நெகிழ்ச்சி

கேரளாவுக்கு சரியான நேரங்களில் நிவாரண உதவிகளை வழங்கும் மத்திய அரசு!

பேரிடர் காலங்களில் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கேரளாவுக்கு, நிவாரண நிதியை சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம் கேரளாவுக்கு மத்திய அரசு எப்போதும் உதவிக் கரம் நீட்டுகிறது. இந்த ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி, கேரள SDRF கணக்கில் சுமார் 395 கோடி ரூபாய் இருந்தது. நடப்பு ஆண்டிற்கான SDRF-இன் மத்திய பங்கின் முதல் தவணை ரூ.145.60 கோடிக்கு முன்னதாக ஜூலை 31 அன்று மத்திய அரசு வெளியிட்டது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிலத்தடியில் இருந்து வந்த மர்ம சத்தம்.. பீதியில் உறைந்த மக்கள்
கடந்த 5 ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதியான ரூ.1200 கோடியை SDRF-ல் மத்திய அரசின் பங்காக மோடி அரசு ரூ.1780 கோடி செலுத்தியுள்ளது. இதுதவிர மோடி அரசு ரூ. கடந்த 5 ஆண்டுகளில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 445 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

click me!