உ.பி. அரசின் புதிய விதிகள் என்ன?
செப்டம்பர் 10 அன்று, உத்தரப் பிரதேச அரசு அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகளுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதன் முக்கிய அம்சங்கள்:
முதல்முறை கடிக்கும் நாய்: எந்தவொரு தூண்டுதலும் இன்றி ஒரு நாயானது மனிதர்களைக் கடித்தால், அந்த நாய் 10 நாட்களுக்கு விலங்குகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
கருத்தடை: கருத்தடை செய்யப்படாத நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, அதன் உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படும். இதன் மூலம் அதன் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும்.
இரண்டாவது முறை கடிக்கும் நாய்: அதே நாய் மீண்டும் ஒரு மனிதனை இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும்.