சின்னபோயினபள்ளி கிராம ஊராட்சித் தலைவர் என். நாகார்ஜுனா இது குறித்துக் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களுக்கு, அரசு ஏன் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்? கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை வலுப்படுத்துவதே எங்களின் நோக்கம். தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் குடும்பத்தினர் அரசின் நலத்திட்டங்களைப் பெறுகிறார்களா என்று கண்டறிந்து, அவற்றை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வோம்" என்று தெரிவித்தார்.
முப்பரம் கிராம ஊராட்சித் தலைவி ஜி. ரேணுகாவும் இதே கருத்தைப் பகிர்ந்துள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியுடன், விலையில்லா சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.