நெருங்கும் தெலுங்கானா தேர்தல்.. திருமலையில் தரிசனம் மேற்கொண்ட பிரதமர் மோடி - அடுத்து எங்கே செல்கிறார்?

Ansgar R |  
Published : Nov 27, 2023, 09:44 AM IST

PM Modi in Tirupati : திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மோடி நேற்று திருப்பதி வந்தடைந்தார். நேற்றிரவு திருமலையில் தங்கிய அவர், இன்று காலை சுமார் 8 மணிக்கு வெங்கடேசப் பெருமானை தரிசித்தார்.

PREV
14
நெருங்கும் தெலுங்கானா தேர்தல்.. திருமலையில் தரிசனம் மேற்கொண்ட பிரதமர் மோடி - அடுத்து எங்கே செல்கிறார்?
PM Modi

வருகின்ற டிசம்பர் 3ம் தேதி ராஜஸ்தான் தேர்தல் முடிவுகளுக்கு முன், தெலுங்கானாவில் நவம்பர் 30 அன்று தேர்தல் வாக்களிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நல்ல முறையில் நடந்து முடிந்தது, வருகின்ற டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

24
Modi in Tirupati

இதனால், உயர்மட்டத் தலைவர்கள் இப்போது தென்னிந்திய மாநிலத்தில் பிரச்சாரத்தின் அவசியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். மாநிலத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் வலியுறுத்தி வரும் நிலையில், கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) சிறுபான்மை சமூகத்தினருக்குச் சலுகைகளை அளித்து வருகிறது.

34
Tirupati Temple

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று நவம்பர் 27, திங்கட்கிழமை தெலுங்கானாவுக்கு வருகை தந்துள்ளார். காலை 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்குச் செல்லும் பிரதமர், அதைத் தொடர்ந்து 11 மணிக்கு மகபூப்நகரிலும், மதியம் 1 மணிக்கு கரீம்நகரிலும், மாலை 4 மணிக்கு கச்சேகுடாவில் பேரணி நடத்துகிறார்.

44
PM Narendra Modi

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் தெலுங்கானாவில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு, அவர் நிஜாமாபாத்தின் NSF மைதானத்தில் இருப்பார். பிற்பகல் 3:10 மணிக்கு, அவர் காமரெட்டியில் உள்ள பான்ஸ்வாடாவின் அரசு ஜூனியர் கல்லூரியிலும், மாலை 4:20 மணிக்கு காமரெட்டியில் உள்ள ஜுக்கலின் மதுர் தலைமையகத்திலும் உரையாற்றுவார்.

கட்டணமில்ல பேருந்தில் பெண்களிடம் வயது, ஜாதி கேட்டது ஏன்.? இபிஎஸ் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்த சிவசங்கர்
 

Read more Photos on
click me!

Recommended Stories