பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஆகஸ்ட் 3, ஞாயிற்றுக்கிழமை) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்" என்று ஒரு பதிவை வெளியிட்டது.