இந்த விவகாரம் குறித்து துணை ஆணையர் நீதா தேசாய் கூறுகையில், "சதர்கதா குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த எங்களிடம் அனுமதி கேட்டனர். ஆனால், இந்த சர்ச்சைக்குரிய பேனர்கள் பற்றி அவர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.
இந்த பேனர்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மாநகராட்சி அனுமதி பெறப்பட்டதா, இதன் நோக்கம் என்ன, யார் இதற்கு பொறுப்பு போன்ற விவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சி குஜராத் பிரிவு, ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.