அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காததும், என் டி ஏ கூட்டணியில் எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். எப்பவும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி இன்று பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து இருக்கிறார். அதுபோல எங்களுடன் இனைய மாட்டோம் என்று சொல்பவர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்பதை, காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். நான் கையெழுத்துயிட்ட பிறகு தான் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நபர்கள், சட்டமன்ற உறுப்பினராக மாறினார்கள் என்றும் தெரிவித்தார். மற்ற நபர்களை சந்தித்தவர்களே மர்மத்தை சொல்லாமல் இருக்கிறார்கள் , நான் மட்டும் எப்படி சொல்வது, அது அரசியல் தர்மமா? என்று கேள்வி எழுப்பிய அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க, நான் நேரம் இன்னும் கேட்கவில்லை என்றும் கூறினார்