வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் (July Uprising) போது முன்னிலை வகித்தவர். கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி டாக்காவில் மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 18-ஆம் தேதி உயிரிழந்தார்.
இவரது மரணம் வங்கதேசம் முழுவதும் பெரும் வன்முறையை ஏற்படுத்தியது. இதற்குக் காரணமானவர்கள் இந்தியாவுக்குத் தப்பிவிட்டதாக வங்கதேசத்தில் ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், இந்தியப் படைகள் அதை மறுத்துள்ளன.
தற்போது வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச எல்லையில் பி.எஸ்.எஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சட்டவிரோத ஊடுருவல் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பி.எஸ்.எஃப் உறுதியளித்துள்ளது.