உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காசர்கோடு டவுன் போலீசார் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஸ்வதி மற்றும் அவரது கணவர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.