இந்த ரயிலுக்கான முதற்கட்ட சோதனை ஓட்டங்கள் (Oscillation trial run) கடந்த மார்ச் மாதமே வெற்றிகரமாக முடிவடைந்தன. ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான ஆர்.டி.எஸ்.ஓ (RDSO), இந்த ரயிலின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்தச் சோதனையை நடத்தியது.
உலக அரங்கில் இந்தியா
இந்த ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியான மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, உலக அளவில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஒரு சில முன்னணி நாடுகளின் எலைட் (Elite) பட்டியலில் இந்தியாவும் இணையும்.
பராமரிப்பு மற்றும் இயக்க விதிகள்
தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியானது ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் ரயிலை இயக்குவதற்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த ரயிலுக்கான வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் ஷாகுர்பஸ்தி (Shakurbasti) ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.
பராமரிப்பிற்காக இந்த ரயிலை 'ஜிந்த் - ஷாகுர்பஸ்தி - ஜிந்த்' ஆகிய இடங்களுக்கு இடையே என்ஜின் மூலம் இழுத்துச் செல்லும்போது (Dead Condition - சுய இயக்கம் இல்லாமல்), அதற்குரிய ரயில்வே விதிமுறைகளின்படி தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.