பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து நேராகப் புது டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி (LNJP) மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை அவர் நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார். அவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனையின் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துப் பிரதமர் விவரமாகக் கேட்டறிந்தார்.
பிரதமர் வருகையையொட்டி, மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.