கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா அடுத்துள்ள டோனிகரா பகுதியைச் சேர்ந்தவர் மாரம்மா (35). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கக்கேரா பகுதியைச் சேர்ந்த சங்கப்பா(40) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.