பிரபல மலையாள சினிமாவில் ராப் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வேடன். அவர் சினிமா தவிர்த்து அரசியல் கருத்துகள் மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டங்கள் மற்றும் எழுச்சியையும் பாடி வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்குமாக கொண்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு முதன்முறையாக அவர் மீது பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து உண்மையை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். கடத்த ஏப்ரல் மாதம் கஞ்சா வைத்திருந்த புகாரில் கைது செய்யப்பட்ட வேடன் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அது மட்டுமல்லாது சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக வனத்துறை அதிகாரிகளாலும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.