விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக இஸ்ரோ பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விண்கலம் கடலில் தரையிறங்கும் மற்றும் மீட்டெடுக்கும் செயல்முறையைச் சோதிக்கும் வகையில் இந்த பாராசூட் சோதனை நடத்தப்பட்டது.
இஸ்ரோ, இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வெற்றி, ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய படிநிலையாகக் கருதப்படுகிறது.