இந்தியாவின் நம்பர் 1 பணக்கார மாவட்டம் எது என்று கேட்டால், பலரும் மும்பை அல்லது பெங்களூரு என்றுதான் நினைப்பார்கள். ஆனால், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 'InfraMantra' நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய பட்டியல், இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. ஆச்சரியமூட்டும் வகையில், இந்த பட்டியலில் தெலங்கானாவைச் சேர்ந்த ரங்காரெட்டி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த செல்வந்த மாவட்டங்கள் வெறும் பொருளாதார மையங்கள் மட்டுமல்ல, சிறந்த சுற்றுலாத் தலங்களாகவும் விளங்குகின்றன. நவீன உள்கட்டமைப்பு, சொகுசு ஹோட்டல்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் என பயணிகளுக்குப் பல வாய்ப்புகளை வழங்குகின்றன. அந்த வகையில், இந்தியாவின் டாப் பணக்கார மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுலா சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பட்டியலில் இடம் பிடித்த மாவட்டங்கள்
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், இந்தியாவின் பணக்கார மாவட்டமாக உருவெடுத்துள்ளதற்கு அதன் தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளே முக்கிய காரணம். ஹைதராபாத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்த மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் மற்றும் கோல்கொண்டா கோட்டை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.