டிக்கெட் முன்பதிவு, PNR நிலை மற்றும் ரயில்வே தொடர்பான கண்காணிப்பு நிலை ஆகியவற்றுக்கு பல்வேறு செயலிகளை பயன்படுத்துவது மிகவும் கடினமாகி வருகிறது. இந்த சிக்கலை சமாளிக்க இந்திய ரயில்வே புதிய சூப்பர் ஆப் ஒன்றை கொண்டு வரவுள்ளது.
எனவே இனி டிக்கெட் முன்பதிவு, PNR நிலை மற்றும் ரயில் கண்காணிப்பு ஆகிய விவரங்களை ஒரே செயலியில் தெரிந்துகொள்ளலாம். மேலும், ரயிலில் பயணம் செய்யும் போது உணவை ஆர்டர் செய்வதற்கும் இந்த பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும். , பிளாட்பார்ம் டிக்கெட் முதல் பொது டிக்கெட் வரை ஆன்லைன் முறையில் வாங்கலாம். இந்த சூப்பர் ஆப் டிசம்பர் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது..