இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்புகளில் ஒன்று. ஆனால், ரயில் பயணம் முடிந்த பிறகு ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருக்கலாம் என்பது உட்பட பல முக்கிய விதிகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரயில் இறங்கிய பிறகு ஸ்டேஷனில் எவ்வளவு நேரம் இருக்கலாம் என்பதற்கு இந்திய ரயில்வே சட்டத்தில் குறிப்பிட்ட நேர வரம்பு எதுவும் இல்லை. ஆனால், பொதுவான விதிகளின்படி, பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டை வைத்து சிறிது நேரம் ஸ்டேஷனில் இருக்கலாம். பொதுவாக, பகல் நேரத்தில் ரயில் இறங்கினால் 2 மணி நேரம் வரை பிளாட்பார்மில் இருக்க அனுமதிப்பார்கள். சில பெரிய ஸ்டேஷன்களில், இரவு நேரத்தில் இந்த வரம்பு 6 மணி நேரம் வரை இருக்கலாம். இது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் மாறுபடும். உள்ளூர் ரயில்வே அதிகாரிகளின் முடிவும் இதில் முக்கியம். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் இருக்க விரும்பினால், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
24
வெயிட்டிங் ரூமை யார் பயன்படுத்தலாம்?
பெரும்பாலான ரயில் நிலையங்களில் வெயிட்டிங் ரூம் வசதி இருக்கும். ரயில் தாமதமானாலோ அல்லது அடுத்த ரயிலுக்காக காத்திருக்க வேண்டியிருந்தாலோ பயணிகள் அங்கே ஓய்வெடுக்கலாம். பொதுவாக, ரயிலில் புறப்படும் பயணிகளுக்கே இந்த வசதி அதிகம் பயன்படும். ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெயிட்டிங் ரூமில் இருக்க அனுமதி உண்டு. இரவு நேரத்தில் வரும் பயணிகள், காலை வரை தங்குவதற்கு சில ஸ்டேஷன்களில் அனுமதிப்பார்கள். ஆனால், பகல் நேர ரயில்களில் வருபவர்களுக்கு இந்த வசதியில் கட்டுப்பாடுகள் இருக்கலாம். அதனால், ஸ்டேஷன் ஊழியர்களிடம் கேட்டு விவரம் தெரிந்துகொள்வது நல்லது.
34
ரிடையரிங் ரூம் என்றால் என்ன?
சில முக்கிய ரயில் நிலையங்களில் ரிடையரிங் ரூம் வசதியும் இருக்கிறது. பயணிகள் அதிக நேரம் ஸ்டேஷனில் தங்க வேண்டியிருந்தால், இந்த அறைகளை புக் செய்துகொள்ளலாம். இவை ஹோட்டல் அறைகளைப் போலவே இருக்கும். சில மணி நேரங்கள் முதல் இரண்டு நாட்கள் வரை கூட புக் செய்யும் வசதி உண்டு. ரயில் டிக்கெட் அல்லது PNR எண்ணைக் காட்டி IRCTC இணையதளம் மூலமாகவோ அல்லது ஸ்டேஷன் கவுன்ட்டரிலோ ரூம் புக் செய்யலாம். இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், வெளியே உள்ள ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது பல ஸ்டேஷன்களில் இதன் விலை குறைவாகவே இருக்கும்.
நிறைய பேர் ரயில் இறங்கியதும் டிக்கெட்டை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால், அது சரியான பழக்கம் இல்லை. ஸ்டேஷனை விட்டு வெளியே செல்லும் வரை டிக்கெட்டையோ அல்லது மொபைலில் வந்த மெசேஜையோ கையில் வைத்திருப்பது நல்லது. சில சமயங்களில், ரயில்வே அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு ஊழியர்கள் டிக்கெட் காட்டச் சொல்லிக் கேட்கலாம். அப்போது அது பயன்படும். மேலும், ரிடையரிங் ரூம், வெயிட்டிங் ரூம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தவும் முறையான டிக்கெட் தேவைப்படும். எனவே, பயணம் முடியும் வரை டிக்கெட்டை பத்திரமாக வைத்திருப்பது சிறந்தது.