உதாரணமாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 4 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் மொத்தம் 12 முன்பதிவில்லா பெட்டிகளுக்கு 1,800 டிக்கெட்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்படும்.
தற்போது, முன்பதிவில்லா பெட்டிகளில் 90 முதல் 100 பேர் மட்டுமே பயணிக்க இருக்கை வசதி இருந்தாலும், தினந்தோறும் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியடித்து பயணம் செய்து வருகின்றனர். இந்த புதிய திட்டம் பயணிகளின் அசௌகரியத்தைக் குறைத்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து சாதக, பாதகங்களை பரிசீலித்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.