இனி தட்கல் டிக்கெட் புக் செய்ய 'இது' கட்டாயம்! இந்திய ரயில்வே அதிரடி உத்தரவு!

Published : Jun 05, 2025, 09:58 AM IST

இனி ரயில் தட்கல் டிக்கெட் புக் செய்ய ஒரு முக்கிய நிபந்தனையை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Aadhaar Verification Mandatory FOR Tatkal Tickets Booking

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

24
தட்கல் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு

ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலனவர்களால் விரைவாக கன்பார்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

 சாமானிய மக்களுக்கு தட்கல் டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலையில், ஏஜெண்ட்டுகள் எளிதாக கெத்து, கொத்தாக தட்கல் டிக்கெட் எடுப்பது எப்படி? என மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்,

34
தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் வெரிபிகேஷன் கட்டாயம்

பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட போலி கணக்குகளை வைத்து தட்கல் டிக்கெட் எடுப்பதாகவும், தட்கலில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாகவும் ரயில்வேக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. 

இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அடிப்படையிலான வெரிபிகேஷன் செய்யப்படும் என ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இதன்மூலம் குளறுபடிகள் செய்து தட்கல் டிக்கெட் எடுப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

மோசடியாளர்களை தவிர்க்க முடியும்

அதாவது தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டால் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஒரு ஓபிடி எண் வரும். அந்த எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. 

கவுன்ட்டர்களில் தட்கல் டிக்கெட் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இந்த ஆதார் வெரிபிகேஷன் மூலமாக மோசடியாளர்களை, குளறுபடிகளை தவிர்க்க முடியும் என்பது ரயில்வேயின் கருத்தாக உள்ளது.

44
ரயில்வேக்கு பொதுமக்கள் முன்வைக்கும் கருத்து

இந்த ஆதார் வெரிபிகேஷன் மூலம் சரியான ஆதார் வைத்திருப்பவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படும். மோசடியாக அதிக டிக்கெட் புக் செய்யும் இடைத்தரரர்களை ஒழித்துக் கட்ட முடியும். ரயில்வேயின் இந்த முடிவுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தாலும், மொபைலில் ஆதார் ஓடிடி பெற்று அதை உள்ளீடு செய்வதற்குள் நேரம் ஓடிவிடுமே. 

அதற்குள் டிக்கெட் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். தட்கல் டிக்கெட் ஆதார் வெரிபிகேஷன் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories