சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை, இளைஞர்களிடையே உயிரிழப்புகளை அதிகரிக்கிறது. 'தி பார்பர் சட்ட நிறுவனம்' நடத்திய ஆய்வில், உலகின் மிக ஆபத்தான செல்ஃபி நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் வெட்கப்படுத்தும் போட்டிகள் இன்று பலரின் வாழ்க்கையை ஆட்டிப் படைக்கும் நிலைக்கு வந்துவிட்டன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக்டாக் போன்ற தளங்களில் வைரலாகும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை, இளைஞர்களிடையே ஒரு பைத்தியமாகவே பரவி வருகிறது. ஒரு செல்ஃபி மூலம் சில நூறு லைக்குகள் கிடைக்கும் என்ற பேராசை, அப்பாவி உயிர்களை பலியெடுத்து வருகிறது. “சரியான புகைப்படம்” என்ற ஒரு தேடல், சிலருக்கு நினைவுகளை மட்டுமே கொடுத்தாலும், பலருக்கு அது உயிரிழப்பைத் தருகிறது என்பது துயரமான உண்மை.
26
இந்திவுக்கு முதலிடம்
சமீபத்தில் ‘தி பார்பர் சட்ட நிறுவனம்’ நடத்திய ஆய்வில் உலகின் மிக ஆபத்தான “செல்ஃபி நாடு” இந்தியா என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2014 முதல் மே 2025 வரை உலகளாவிய அளவில் செல்ஃபி தொடர்பான செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்த இந்த நிறுவனம், உலகளவில் நடந்த உயிரிழப்புகளில் 42.1% சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன என்று அறிவித்துள்ளது. மொத்தம் 271 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 214 பேர் உயிரிழந்துள்ளனர், 57 பேர் காயமடைந்துள்ளனர்.
36
இளைஞர்களிடையே பரவி வரும் சமூக ஊடக வெறி.!
இந்தியாவில் இப்படிப் பட்ட சம்பவங்கள் அதிகரித்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முதலாவது, நாட்டின் அதிகமான மக்கள்தொகை. இரண்டாவது, இளைஞர்களிடையே பரவி வரும் சமூக ஊடக வெறி. மூன்றாவது, ரயில் பாதைகள், பாறைச் சரிவுகள், கடற்கரைப் பாறைகள், உயரமான கட்டிடங்கள் போன்ற ஆபத்தான இடங்களுக்கு எளிதான அணுகல். பலர் “அபாயகரமான இடத்தில் செல்ஃபி எடுக்க வேண்டும்” என்ற ஆர்வத்தில் தங்களை ஆபத்தில் ஆழ்த்திக் கொள்கிறார்கள்.
உலகின் பிற நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் 45 சம்பவங்கள் (37 மரணங்கள், 8 காயங்கள்), ரஷ்யாவில் 19 சம்பவங்கள், பாகிஸ்தானில் 16, ஆஸ்திரேலியாவில் 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் இந்தோனேஷியா, கென்யா, ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளிலும் தலா 13 முதல் 14 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம், “செல்ஃபி கலாசாரம்” உலகம் முழுவதும் உயிரிழப்புகளை அதிகரித்திருப்பது தெளிவாகிறது.
56
ரயில்களில் செல்ஃபி வேண்டாமே.!
கூரைகள், பாறைச் சரிவுகள், பாலங்கள், உயரமான கட்டிடங்கள் ஆகிய இடங்களில் புகைப்படம் எடுக்க முயன்றபோது பலர் உயிரிழந்துள்ளனர். “பிரமாண்டமான பின்னணி” தேடுதல், பெரும்பாலான குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாவது முக்கியமான காரணமாக ரயில் விபத்துகள் சொல்லப்படுகின்றன. நகரங்களில் ரயில் பாதையில் செல்ஃபி எடுக்கும் போது, பலர் திடீரென ரயிலின் பலியாவதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
66
புகைப்படம் உங்கள் உயிரை விட முக்கியமல்ல
சமூக ஊடக மதிப்பீட்டிற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். “துணிச்சலான” புகைப்படங்கள் வாழ்க்கையை அழிக்கக் கூடாது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள் ஆகியவை முன்வர வேண்டும். குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.முடிவாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு புகைப்படம் உங்கள் உயிரை விட முக்கியமல்ல என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். நினைவுகளைப் பதிவு செய்வது நன்றே. ஆனால், அந்நினைவுகள் சோகமாக மாறாமல் இருக்க பாதுகாப்பை முதன்மைப்படுத்துவதே உண்மையான அறிவு.