2030 காமன்வெல்த் போட்டியை அகமதாபாத்தில் நடந்த இந்தியா பரிந்துரை!

Published : Oct 15, 2025, 10:12 PM IST

2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா தீவிரமாக முயன்று வரும் நிலையில், அகமதாபாத் நகரை காமன்வெல்த் போட்டிகள் நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த வாய்ப்பு, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முன்னோட்டமாக அமையும்.

PREV
13
இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டி

2030-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் இந்தியா மிகுந்த ஆர்வம் காட்டி வந்த நிலையில், அகமதாபாத்தில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு காமன்வெல்த் போட்டிகள் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது.

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். அதன்படி, இந்தியா சார்பில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கப்பட்டது.

23
அகமதாபாத்தில் நடந்த பரிந்துரை

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகள் நிர்வாகக் குழு, 2030 காமன்வெல்த் போட்டிகளை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்துவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையானது, காமன்வெல்த் போட்டிகளில் அங்கம் வகிக்கும் முழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். அதன் பிறகு, நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

33
ஒலிம்பிக் போட்டிக்கான ஒத்திகை

இந்தியா ஏற்கனவே 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்தச் சூழலில், 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்குமானால், அது 2036 ஒலிம்பிக் போட்டிக்கான ஒரு சிறந்த 'முன்னெடுப்பாகவும்' (முன்னோட்டமாகவும்) பார்க்கப்படும்.

இந்தியா கடைசியாக 2010-ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories