அக்டோபர் 26 முதல், ஏர் இந்தியா ராஜஸ்தானின் பல பகுதிகளுக்கு பருவகால விமானங்களை அறிமுகப்படுத்துகிறது.
டெல்லி - ஜெய்ப்பூர், டெல்லி - ஜெய்சல்மேர் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டெல்லி - உதய்பூர், மும்பை - ஜெய்ப்பூர், மும்பை - உதய்பூர், மற்றும் மும்பை - ஜோத்பூர் வழித்தடங்களில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.
மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு கூடுதல் விமான சேவைகள் அக்டோபர் 26 முதல் தொடங்கும்.
மும்பை மற்றும் டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள்.
அதேபோல், மும்பை மற்றும் டெல்லியிலிருந்து குஜராத்தின் புஜ் மற்றும் ராஜ்கோட் நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், டெல்லி - வாரணாசி, டெல்லி - ராய்ப்பூர், டெல்லி - போர்ட் பிளேர், டெல்லி - அவுரங்காபாத், டெல்லி - கவுகாத்தி, டெல்லி - நாக்பூர், மும்பை - டேராடூன், மும்பை - பாட்னா மற்றும் மும்பை - அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களிலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.