வெடிவிபத்துக்குப் பின் கார் முழுவதும் தீப்பற்றி, கருமை புகை வானில் எழுந்தது. தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு சென்றனர்.
இந்நிலையில், தேசிய விசாரணை முகமையான என்ஐஏ (NIA) வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு தீவிரவாத சதி உள்ளதா என்றும் NIA ஆராய்கிறது.
இந்த வெடிவிபத்துக்குப் பின் மும்பை மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லக்னோவில் இருந்து உத்தரபிரதேசம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.