விபத்து நடந்தபோது பேருந்தில் 43 பேர் இருந்தனர். அவர்களில் இரண்டு குழந்தைகள் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதுவரை 11 பேர் இறந்துவிட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.. மேலும் சிலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது, ஏனெனில் அவர்கள் பற்றிய எந்த தடயமும் இல்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. 23 பயணிகள் பாதுகாப்பாக தப்பித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கர்னூல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஏ. சிறி கூறுகையில், “அதிகாலை 3 மணி முதல் 3:10 மணி அளவில் தனியார் பேருந்து மீது ஒரு மோட்டார் சைக்கிளில் மோதியதில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதில் பயணம் செய்த 41 பயணிகளில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுவரை, இறந்தவர்களில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மற்றவர்களின் அடையாளங்களை காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.