காவல்துறையினர் தெரிவித்த தகவல்படி, ஐந்து கொள்ளையர்களும் ஒரு வெள்ளை நிற ஹேட்ச்பேக் காரில் புதன்கிழமை அதிகாலை 2:25 மணியளவில் ஜஹாங்கிர்புராவில் உள்ள சித்ராலி ரோ ஹவுஸ் என்ற குடியிருப்பு சங்கத்திற்கு எதிரே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்துள்ளனர்.
அவர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து, சிசிடிவி கேமராக்களை கருப்பு டேப் மூலம் மறைத்துள்ளனர். மேலும், தானியங்கி எச்சரிக்கை அமைப்பையும் செயலிழக்கச் செய்துள்ளனர். அதன்பிறகு, கேஸ் கட்டர் பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தின் அனைத்து சேம்பர்களிலும் இருந்த பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.