இந்த ரயில்களில், ஏசி பெட்டிகளில் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்குள் இறங்கவேண்டியது இருந்தால், 15 நிமிடங்களுக்கு முன் அவர்களை எழுப்ப வேண்டிய பொறுப்பு டிக்கெட் பரிசோதகரிடம் உள்ளது. இந்திய ரயில்வே இதற்காக ஒவ்வொரு டிக்கெட் பரிசோதகருக்கும் 'வேக் அப்' மெமோவை வழங்குகிறது.
டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரிபார்க்கும்போதே பயணிகள் எந்த நேரத்தில் எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வார். அதன்படி, மெமோவில் பயணிகளின் பெயர் மற்றும் இருக்கை எண்ணை எழுதுவார்.