பிஏசிஎல் லிமிடெட், பிஜிஎஃப் லிமிடெட் (PGF Limited), மறைந்த நிர்மல் சிங் பங்காவு (Nirmal Singh Bhangoo) மற்றும் பிறர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 120-பி மற்றும் 420 பிரிவுகளின் கீழ் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில், அமலாக்கத்துறையின் டெல்லி மண்டல அலுவலகம் தனது விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கு, பிஏசிஎல் நிறுவனத்தால் பெரிய அளவிலான மோசடி கூட்டு முதலீட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையது என்றும், இது முதலீட்டாளர்களை ஏமாற்றவும், மோசடி செய்யவும் கட்டமைக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை மேலும் கூறியது.
"இந்த மோசடித் திட்டங்கள் மூலம், பிஏசிஎல் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் பிறர் மூலம், அப்பாவி முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.48,000 கோடியைத் திரட்டி மோசடி செய்துள்ளனர். இது குற்றத்தின் மூலம் கிடைத்த வருவாய் (Proceeds Of Crime - POC) ஆகும்" என்று மத்திய ஏஜென்சி தெரிவித்துள்ளது.