ஒரு மருத்துவரின் வீட்டில் இருந்து சுமார் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ், இரண்டு ஏ.கே.-47 துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள் மற்றும் ரசாயன பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புக் குழு, உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து மருத்டுவர் வீட்டை சோதந்னை செய்தனர்.
பயங்கரவாத அமைப்பான அன்சர் கஸ்வத்-உல்-ஹிந்த் மீதான விசாரணையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் மூன்று மருத்துவர்கள் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்களில் இருவரான அனந்த்நாக்கில் வசிக்கும் அடில் அகமது ராதர் புல்வாமில் வசிக்கும் முசம்மில் ஷகீல் ஆகியோர் சஹாரன்பூர், ஃபரிதாபாத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். மூன்றாவது மருத்துவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.