சுமார் ரூ.50 கோடி மதிப்பில் அமையவுள்ள இந்த புதிய மையம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்டிருக்கும். இது வைஷ்ணவ மூத்த குடிமக்கள் மற்றும் வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் கண்ணியமான தங்குமிடத்தை வழங்கும்.
24 மணிநேர மருத்துவப் பிரிவு, செவிலியர் மற்றும் பிசியோதெரபி சேவைகள் இதில் இடம்பெறும். ஆன்மிகச் சொற்பொழிவு செய்வதற்கான பெரிய மண்டபம் அமைக்கப்படும். புஷ்டிமார்க்க மரபின் அடிப்படையில் பாரம்பரிய உணவகம் உருவாக்கப்படும்.
நாத்வாராவுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் சேவை செய்யவேண்டும் என்பது அனந்த் அம்பானியின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.