டெல்லியின் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றுத் தரத்தைக் கட்டுப்படுத்த உரிய கொள்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கை கோரி, இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று மாலை தொடங்கிய இப்போராட்டத்தில், டெல்லியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல மாணவர்கள் மற்றும் டெல்லிவாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தி, இரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.