தீபாவளி ஜாக்பாட்.! ரேஷன் கடையில் இனி இரண்டு முறை அரசி, சக்கரை வாங்கலாம்- அரசு புதிய அறிவிப்பு

First Published Oct 9, 2024, 10:25 AM IST

தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 2 முறை ரேஷன் பொருள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Ration Shop

இந்தியா வளரும் நாடாகக் கருதப்பட்டாலும் நாட்டில் குறிப்பிட்ட சதவீத மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், ஒவ்வொரு வேளை உணவுக்கும் கஷ்டப்படும் நிலை தான் தற்போதும் நீடிக்கிறது. அப்படிப்பட்டவர்களை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், மண்ணெண்னை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

Ration Shop

தமிழகத்தில் அரிசி இலவசமாகவும், பிற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொருட்கள் அதன் தேவைக்கு ஏற்ப இலவசமாகவோ மலிவு விலையிலோ அரசின் பங்களிப்போடு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Latest Videos


Ration Shop

பொங்கல் பரிசு தொகுப்பை போன்று பல மாநிலங்களில் அந்தந்த மாநில பண்டிகைக்கு தகுந்தவாறு சலுகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது தீபாவளி பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில் பசுமை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மாதம் இரு முறை ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Ration Shop

இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பசுமை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மாதம் இரு முறை ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பசுமை ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்த கார்டு வைத்திருக்கும் நபர்கள் அரிசியை கிலோ ரூ.1 என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் இந்த கார்டு வைத்திருக்கும் நபர்கள் இரு முறை ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!