ஏழை மாணவர்கள் படிக்கட்டும்.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த பக்தர்!

Published : Dec 31, 2025, 08:47 PM IST

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பக்தரான லாவு ரத்தையா, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

PREV
13
ரூ.1 கோடி நன்கொடை

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கல்வி அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

23
கல்விப் பணிக்காக நிதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமான டிடிடி (TTD), ஏழை மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாதான அறக்கட்டளை' (Sri Venkateswara Vidyadan Trust) என்ற அமைப்பை நடத்தி வருகிறது.

குண்டூரைச் சேர்ந்த பக்தர் லாவு ரத்தையா (Lavu Rattaiah), இன்று திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், தான் கொண்டு வந்த 1 கோடி ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்டை (DD), திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் நேரில் வழங்கினார்.

33
அறக்கட்டளையின் சேவை

இந்த நன்கொடை குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த நிதி வசதியற்ற மாணவர்களின் உயர்கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைக்காகப் பயன்படுத்தப்படும். மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் இந்த அறக்கட்டளை முக்கியப் பங்காற்றுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பணக்காரக் கோவில்களில் ஒன்றான திருப்பதியில், தற்போது இது போன்ற கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைகளுக்குப் பக்தர்கள் அதிகளவில் நன்கொடை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories