Dahagram Angarpota village : இந்தியாவுக்குள்ளேயே ஒரு கிராமம் இருக்கு. ஆனால், அங்கு இந்தியர்களான நாம் போக வேண்டும் என்றாலும் பாஸ்போர்ட் தேவை. ஏன் இப்படி ஒரு வினோத விதி என்பதை இங்கே பார்க்கலாம்.
2015-ல் இந்தியா-பங்களாதேஷ் நில எல்லை ஒப்பந்தம் (LBA) கையெழுத்தானது. அப்போது, இந்தியா 111 பகுதிகளை பங்களாதேஷுக்கு கொடுத்தது. ஆனால், மேற்கு வங்கத்தில் இந்திய நிலத்தால் சூழப்பட்ட ஒரு சின்ன பகுதியை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. இந்த பகுதி பங்களாதேஷுக்கு சொந்தமானது, இங்கு பங்களாதேஷ் சட்டங்கள்தான் அமலில் உள்ளன.
25
தஹாகிராம்-அங்கர்போட்டா கிராமம்
இந்த இடத்தின் பெயர் தஹாகிராம்-அங்கர்போட்டா. இது மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்திற்குள் அமைந்துள்ள ஒரு பங்களாதேஷ் பகுதி. இங்கு 20,000-க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் குடிமக்கள் வாழ்கின்றனர். இந்தியாவுக்குள் இருந்தாலும், இது பங்களாதேஷின் ஒரு பகுதியாகவே செயல்படுகிறது. இந்த கிராமத்திற்குள் நுழைவது மிகவும் கடினம்.
35
இங்கு எந்த நாட்டு கரன்சி புழக்கத்தில் உள்ளது?
தஹாகிராம்-அங்கர்போட்டா கிராமம் சுமார் 18.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்திய நிலத்தால் சூழப்பட்டிருந்தாலும், இங்குள்ள மக்கள் பங்களாதேஷ் கரன்சியைத்தான் பயன்படுத்துகிறார்கள். பள்ளிகள், அரசு சேவைகள், மருத்துவமனைகள் என அனைத்தும் பங்களாதேஷ் அரசுக்கு சொந்தமானவை. மக்கள் பங்களாதேஷ் மொபைல் நெட்வொர்க்குகளையே பயன்படுத்துகின்றனர்.
1992-க்கு முன்பு, இந்த கிராம மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. பங்களாதேஷ் வெறும் 178 மீட்டர் தூரத்தில் இருந்தாலும், நேரடியாக செல்ல வழி இல்லை. கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல இந்திய அரசின் அனுமதி தேவைப்பட்டது. அடிப்படை வசதிகளும் குறைவாகவே இருந்தன. வெளி உலகிலிருந்து துண்டிக்கப்பட்டதால், இவர்களின் வாழ்க்கை ஒரு திறந்தவெளி சிறை போலவே இருந்தது.
55
டின் பிகா காரிடார் அனைத்தையும் மாற்றியது!
இந்த சிக்கலைத் தீர்க்க 1974-ல் இந்தியாவும் பங்களாதேஷும் ஒரு ஒப்பந்தம் போட்டன. அதன்படி, 'டின் பிகா காரிடார்' என்ற ஒரு சிறிய நிலப்பாதையை பங்களாதேஷுக்கு இந்தியா குத்தகைக்கு கொடுத்தது. 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாதை, தஹாகிராம்-அங்கர்போட்டாவையும் பங்களாதேஷையும் நேரடியாக இணைக்கிறது. ஆரம்பத்தில் 12 மணி நேரம் மட்டுமே திறந்திருந்த இந்த பாதை, 2011 முதல் 24 மணி நேரமும் திறந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியர்கள் சிறப்பு அனுமதி அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் இங்கு நுழைய முடியாது.