கேரளாவின் எண்ணெய் வர்த்தக அமைப்புகள் கூறுவதாவது, கொப்பரையின் கையிருப்பை சிலர் கட்டுப்படுத்தி, குறைந்த சந்தையில் மட்டுமே வெளியிடுவதால் விலை உயர்கிறது. இதனால், தேங்காய் எண்ணெய் வாங்கும் பொதுமக்கள் மட்டுமல்ல, சிறிய எண்ணெய் ஆலைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதிக மூலப்பொருள் விலை காரணமாக, பல சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தேங்காய் எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, நுகர்வோர் பலர் பாம் ஆயில், சூரியகாந்தி எண்ணெய் போன்ற மலிவான மாற்று எண்ணெய்களை நோக்கி மாறி வருகின்றனர். இதனால் தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால், தேங்காய் விவசாயிகளுக்கும் நீண்டகால பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.