ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த 'சலோ சன்சத்' பேரணிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பல எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் CJP கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதாக சௌரவ் தாஸ் உறுதிப்படுத்தினார்.
சௌரவ் தாஸ் மேலும் கூறுகையில், "டெல்லியில் மட்டுமல்ல, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர்-களை திரும்பப் பெற வேண்டும் என்பது எங்களின் இரண்டாவது கோரிக்கை. அதையும் அரசு ஏற்றுக்கொண்டது. விரைவில் வழக்குகள் திரும்பப் பெறப்படும். டெல்லியில் மட்டும் 15 முதல் 20 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் நகல்களை மூன்று நான்கு நாட்களில் தருவதாக அரசு உறுதியளித்துள்ளது" என்றார்.
தர்மேந்திர பிரதான் சொன்னது என்ன?
முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். "மாணவர்களின் நலனுக்காகவும், நாட்டின் இளைஞர்கள் ஒரு குழப்ப வலையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவும்" பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.