அவரது அகால மரணச் செய்தியை பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா இரங்கல் தெரிவித்துள்ளார். குமானின் மறைவு பஞ்சாபிற்கு ஒரு பெரிய இழப்பு . மேலும், அந்தப் புகழ்பெற்ற பாடிபில்டர் தனது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திறமையால் மாநிலத்திற்கு பெரும் பெருமை சேர்த்ததாகக் கூறினார். குமானின் ஆன்மா சாந்தியடையவும், இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்ஜத் சிங்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.