சிறப்புத் திருத்தப் பணியின் விளைவாக, பீகாரின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. திருத்தத்திற்கு முன் 7.89 கோடி ஆக இருந்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, தற்போது 7.43 ஆகக் குறைந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில், 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 21.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
பாலின வாரியான எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.72 கோடியில் இருந்து 3.49 கோடியாகவும், ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4.07 கோடியில் இருந்து 3.92 கோடியாகவும் குறைந்துள்ளது. அதேபோல, மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 2,104-ல் இருந்து 1,725 ஆகக் குறைந்துள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.