கர்நாடகாவில் , கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2 -க்குள் தொழுகை செய்தவர்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பு குறைபாடு, காங்கிரஸ் அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத், இந்த சம்பவ வீடியோவை பகிர்ந்து ‘‘முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் பிரியங்க் கார்கேவும் உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பிரார்த்தனைகளை அங்கீகரித்தார்களா? பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் டி2 முனையத்திற்குள் இது எப்படி அனுமதிக்கப்படுகிறது? முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர் பிரியங்க் கார்கேவும் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?” எனக் கேள்வ்வி எழுப்பியுள்ளார்.