இந்த இடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டேஷ்வர். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, அதன் தனித்துவமான நதிப் பாதைக்காக மட்டுமல்லாமல், ஆன்மிக முக்கியத்துவத்திற்காகவும் புகழ்பெற்றது. பட்டேஷ்வரில் யமுனையின் கரையோரமாக 101-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே பகுதியில் இத்தனை கோயில்கள் நதிக்கரையை ஒட்டி அமைந்திருப்பது இந்த இடத்தின் முக்கியமான சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த நதிக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கு. பதாவர் வம்சத்தைச் சேர்ந்த ராஜா பதன் சிங், யமுனை நதியோட ஓட்டத்தை, அங்க இருக்குற கோயில் படிக்கட்டுகளைத் தொட்டுட்டுப் போற மாதிரி மாத்த நினைச்சார். இதுக்காக, சுமார் 3 கி.மீ. நீளத்துக்கு அரைவட்ட வடிவில் ஒரு கல் அணையைக் கட்டினார். இதனாலதான் நதி பின்னோக்கிப் பாயுதுன்னு உள்ளூர் மக்கள் நம்புறாங்க. ஆனா, அந்த அணை மட்டும் காரணம் இல்லை. அந்தப் பகுதியோட இயற்கையான புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, வரலாற்று ரீதியான கட்டுமானம் எல்லாமே சேர்ந்துதான் பட்டேஷ்வர்ல இந்த அரைவட்டத் திருப்பத்தை உருவாக்கியிருக்கு.
Blood River: தண்ணி இல்ல, ரத்தம் ஓடுற ஆறு நம்ம நாட்டுல எங்க இருக்கு தெரியுமா?