உலகளவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறக்கும்போது மட்டுமே மக்கள் தொகை நிலையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது பல குடும்பங்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற விரும்புவதால், எதிர்காலத்தில் பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அரசு கருதுகிறது.
முதல்வர் கூறிய காரணங்கள்:
- பிறப்பு விகிதம் குறைவு
- எதிர்கால பணியாளர் பற்றாக்குறை
- பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை அவசியம்
‘குழந்தைகள் சுமை அல்ல’.. நாயுடுவின் கருத்து
“குழந்தைகள் ஒரு சுமை அல்ல; அவர்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் ஒரு சொத்து” என்று முதல்வர் நாயுடு தெரிவித்துள்ளார். தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை சரிவை இந்தியா சந்திக்க என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசியல் சர்ச்சையும் கிளம்பியது
இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன. மக்களவை தொகுதி மறுசீரமைப்பை மனதில் வைத்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இருந்தாலும், மக்கள் தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.