மங்களகிரியில் நடைபெற்ற 'வறுமை ஒழிப்பு' தொடர்பான P4 திட்டத்தின் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பக்தர் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
"ஒரு பக்தர் புதிய நிறுவனம் தொடங்க விரும்பினார். அதைத் தொடங்கி, அதில் பெரும் வெற்றியும் கண்டார். அந்த வெற்றிக்கான நன்றியை இறைவனுக்குத் தெரிவிக்க அவர் முடிவு செய்தார். இதன் விளைவாக, தற்போது அவர் ஏழுமலையான் சுவாமிக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்க உள்ளார்," என்று முதல்வர் கூறினார்.