திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய அம்பானி குடும்பம்

Published : May 01, 2025, 10:02 AM IST

வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணத்தால் அம்பானியின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். 

PREV
14
திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய அம்பானி குடும்பம்

Unexpected Loss in Ambani Family : முகேஷ்-நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது. இவர் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் அம்பானி விலங்குகள் மீதும் அதிக அன்பு கொண்டவர். குஜராத்தின் ஜாம்நகரில் 'வனதாரா' என்ற பெயரில் விலங்குகள் காப்பகத்தை தொடங்கியுள்ளார். ஆனந்த் அம்பானி 'வனதாரா'வுக்காக மாதம் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை செலவிடுகிறார். இதற்கான ஆண்டுச் செலவு 150 முதல் 200 கோடி ரூபாய் வரை ஆகும். 

24
ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானியின் வனதாரா

இதில் விலங்குகளுக்கான சிறப்பு உணவு, சர்வதேச கால்நடை மருத்துவர்கள் குழுவின் செலவு, குளிர்சாதன வசதியுடன் கூடிய மருத்துவப் பிரிவுகள் மற்றும் நவீன மறுவாழ்வு மையத்தின் செலவும் அடங்கும். இந்த காப்பகத்தை ஆனந்த் அம்பானி நேரடியாகக் கண்காணிக்கிறார். இது அவரது கனவுத் திட்டம். ஜாம்நகரில் ரிலையன்ஸ் கிரீன்ஸுக்கு அருகில் 3000 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள வனதாரா ஒரு ஆடம்பர ரிசார்ட்டைப் போன்றது. 

34
வனதாரா

காட்டை உருவாக்கிய ஆனந்த் அம்பானி

யானை, சிங்கம், சிறுத்தை, மான், ஆமை, குதிரை மற்றும் 100க்கும் மேற்பட்ட அரிய வகை விலங்குகளுக்கு இயற்கையான சூழல் இங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலங்குகள் அனைத்தும் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து மீட்கப்பட்டவை. ஆனந்த் அம்பானியின் வனதாரா திட்டத்தில் மீட்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவை காட்டில் இருப்பது போன்ற சுதந்திரத்தை உணரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

44
நாய் மரணம்

ஆனந்த் அம்பானியின் செல்ல நாய்க்குட்டி ஹேப்பி

அதனால்தான் வனதாரா 'விலங்குகளின் தாஜ்மஹால்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது வனதாராவில் 200 யானைகள், 300 சிறுத்தைகள், 300 மான்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் பராமரிக்கப்படுகின்றன. இப்படி விலங்குகளை விழுந்து விழுந்து கவனிக்கும் ஆனந்த் அம்பானி, தன்னுடைய வீட்டிலும் ஒரு செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். அதில் அவரின் செல்ல நாய்க்குட்டியான ஹேப்பியும் ஒன்று. 

கோல்டன் ரிட்ரைவர் வகை நாயான இது அம்பானி குடும்பத்தில் ஒரு செல்லக் குழந்தை போல் வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நடந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கூட இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடை அணிந்து ஜம்முனு வலம் வந்து கொண்டிருந்தது ஹேப்பி. இந்நிலையில், உடல்நலக்குறைவால் ஏப்ரல் 30ந் தேதி உயிரிழந்துள்ளது. ஹேப்பியின் மறைவால் அம்பானி குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது. நீ என்றென்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருப்பாய் என அம்பானி பேமிலி இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories