இந்த சலுகை ஒருமுறை மட்டுமே கிடைக்கும், டிசம்பர் 8க்குள் மாற்றம் அல்லது ரத்து செய்யப்பட்டால் மட்டுமே இது செல்லும். புதிய பயண தேதிக்கான கட்டணம் பழையதை விட அதிகமாக இருந்தால், அந்த வேறுபட்ட தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். அதே நேரத்தில், பயணிகள் புகார்கள் மற்றும் அழைப்புகள் அதிகரித்ததால், ஏர் இந்தியா கூடுதல் பணியாளர்களை தனது வாடிக்கையாளர் சேவை மையத்தில் நியமித்துள்ளது. 24/7 கால் சென்டர் மற்றும் பயண முகவர்கள் வழியாக பயணிகள் தங்கள் முன்பதிவுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது ரத்து செய்யலாம்.
சூழ்நிலையை சீர்படுத்தும் நோக்கில், சில முக்கிய பாதைகளில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன, சில ஏற்கனவே உள்ள சேவைகளில் கூடுதல் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள், முதியவர்கள், ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே இருந்த சலுகை கட்டண திட்டங்கள் ஏர் இந்தியா வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப்பில் தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பயண வாய்ப்புகள் இருக்கும்.