இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிர் தப்பியவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர்,
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போனவர்களில் சப்பிதா க்ராந்தி கிரண் (19), சப்பிதா பால் அபிஷேக் (18), வட்டி மகேஷ் (15), வட்டி ராஜேஷ் (15) ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன், தாடிபூடி நிதீஷ் (18), ஏலுமார்த்தி சாய் (18), ரோஹித் (18), எலிபே மகேஷ் (14) ஆகியோரும் காணாமல் போயினர்.