நோன்பு காலத்தில் சக்கரை நோயாளிகள் கவனத்திற்கு..!!

First Published Mar 22, 2023, 5:11 PM IST

சிலர் பல மணி நேரம் சாப்பிடாமல் நோன்பு திறக்கும் போது முடிந்தவரை சாப்பிட முயற்சிப்பார்கள். இது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நோன்பு திறக்கும் போது முதலில் மிதமான உணவை உண்ணுவது மிகவும் முக்கியம்.
 

diabetes diet

ரமலான் இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான மாதம். தவக்காலம் தொடங்கும் போது வாழ்க்கை முறையில் திடீர் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் நோன்பு காலத்தில் ரத்த சர்க்கரை அளவை தினமும் சரிபார்க்க வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் நோன்பு திறக்கும் போது முடிந்தவரை இனிப்பு, எண்ணெயில் பொரித்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நோன்பு திறக்கும் போது குடிக்கும் குளிர்பானங்களில் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும். 
 

diabetes

பிரியாணி, இறைச்சி, மீன், பொரோட்டாவுக்குப் பதிலாக கஞ்சி, கடலைப்பருப்பு, கீரை, முருங்கை இலை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்துக்கு அதிக நன்மை பயக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பழச்சாறுகளுக்கு பதிலாக, பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உப்பு நிறைந்த உணவுகளையும் முடிந்தவரை தவிர்க்கலாம். சிலர் பல மணி நேரம் சாப்பிடாமல் நோன்பு திறக்கும் போது முடிந்தவரை சாப்பிட முயற்சிப்பார்கள். இது சில நேரங்களில் உடல் நலத்தை மோசமாக பாதிக்கும். எனவே நோன்பு திறக்கும் போது முதலில் மிதமாக மட்டுமே சாப்பிடுங்கள். சிறிது நேரம் கழித்து நீங்கள் நன்றாக சாப்பிடலாம். உண்ணாவிரதம் இருந்து இரவு உணவு வரை நிறைய இளநீர் குடிக்கவும்.

கோடையில் ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதைச் செய்யுங்க..!!

diabetes

இந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், ஒரு மாதம் விரதம் இருப்பதன் மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். நோய் பாதிப்புக்காக மருந்தை உட்கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி நோன்பில் ஈடுபடக் கூடாது. மருத்துவர் வழங்கும் ஆலோசனையை கேட்டு, நீங்கள் உங்களுடைய ரமலான் நோன்பை தொடரலாம்.

click me!