நாம் உண்ணும் உணவில் எப்போதும் அலட்சியம் காட்டக் கூடாது. அப்படி செய்தால் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய், மூட்டு வலி ஆகிய நோய்கள் வரக்கூடும். இதற்கு தீர்வு ஆரோக்கியமான உணவுகளை அளவாக உண்பதுதான். நீங்கள் 40 வயதைக் கடந்தவர் என்றால் தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள லைகோபீன் என்ற ஆற்றல்வாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். தக்காளியை சூப்பாக குடிக்கலாம்.