Earphone பயன்படுத்திய பிறகு காதுக்குள் “ஈ...ஈ...” என்று தொடர்ந்து ரீங்கார சத்தம் கேட்பது, காதுகள் அடைத்தது போல உணர்வது அல்லது மற்றவர்கள் பேசுவதை தெளிவாக கேட்க முடியாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குறிப்பாக, இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் Earphone பயன்பாட்டை குறைத்து, காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுகுவது நல்லது.
Earphone-ஐ மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தாதீங்க!
காதுகளின் சுகாதாரத்திற்காக Earphone-ஐ மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக In-ear Earphone-களை பலர் மாறி மாறி பயன்படுத்தும்போது காதில் இருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது.
Earphone பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், குறைந்த Volume வைத்து குறைந்த நேரம் பயன்படுத்துவது நல்லது.
WHO-வின் தகவல்படி, அதிக சத்தத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து Earphone பயன்படுத்தினால், நாளடைவில் கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். எனவே தினமும் Earphone பயன்படுத்துபவர்கள், இன்று முதல் Volume-ஐ கொஞ்சம் குறைத்து, பயன்படுத்தும் நேரத்தையும் கட்டுப்படுத்துவது காதுகளின் ஆரோக்கியத்திற்கு நல்ல பழக்கமாக இருக்கும்.