வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. கிரீன் டீயில் உள்ள டானின்கள் வயிற்றில் எரிச்சல், அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வாயு, அசிடிட்டி, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே வெறும் வயிற்றில் க்ரீன் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காலை உணவுக்குப் பின்னர் அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கிரீன் டீ குடிக்கலாம்.